பட்டாசு ஆலை விபத்து.. உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!

Fireworks shop owners have registered a case against 3 people and the police are investigating.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்ப்பட்ட அறைகள் உள்ளன. அதில், இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் தங்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது, மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் இன்று 70-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், பட்டாசு கடை உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமரை தொடர்ந்து, உயிரிழந்த குடும்பத்திற்கு தலா  ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.