இந்தி பேசுறவங்களே தமிழ்நாட்டுக்கு தான் வேலை தேடி வாரங்க! திருமாவளவன் ஸ்பீச்!

இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

vck thirumavalavan

சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் இன்னும் பெரிதாக வெடிக்க காரணமாக தர்மேந்திர பிரதான் பேசியது அமைந்தது. முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள்” என பேசியிருந்தார்.

இதற்கும் சேர்ந்து திமுகவை சேர்ந்தவர்கள் கண்டனங்களை தெரிவித்து பேசி வருகிறார்கள். மற்றொரு பக்கம் மத்திய அரசை சேர்ந்தவர்கள் இந்தி படித்தீர்கள் என்றால் நல்ல வேலை கிடைக்கும் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, இந்தி பேசக்கூடியவர்களே தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” தமிழ்நாட்டுக்கு இருமொழிக்கொள்கை என்பது போதுமானது. இரு மொழிகொள்கையை நடைமுறை படுத்துவது தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இந்திய மக்களுக்கும் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இருக்கும். எனவே மும்மொழி கொள்கையை எப்போதும் தமிழ்நாடு எதிர்க்கும். பாஜகவை சேர்ந்தவர்கள் எதோ இந்தியை படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலே அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்தி பேசக்கூடியவர்களே வேலையில்லாமல் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார்கள். இப்படி இருக்கையில் ஒரே தேசம்…ஒரே மொழிகொள்கையை எதிர்காலத்தில் உருவாக்கம் பாஜக முயற்சி செய்கிறார்கள். அதனை நிறுத்திக்கொள்ளவேண்டும்” எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்