”நட்பு ரீதியாக ராமதாஸை சந்தித்தேன், அன்புமணி வந்ததே எனக்கு தெரியாது” – ஆடிட்டர் குருமூர்த்தி.!
அதிமுகவின் சைதை துரைசாமியுடன், பாஜக பிரமுகரான ஆடிட்டர் குருமூர்த்தி, தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாஸை சந்தித்துள்ளார்.

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. உச்சக்கட்டமாக கட்சியின் தலைவர் தானே என ராமதாஸ் அறிவிக்க, பொதுக்குழு தன்னையே தேர்வு செய்தது என அன்புமணியும் முரண்டு பிடித்தார்.
2026 தேர்தலில் கூட்டணிக்குள் பாமக இருக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், ராமதாஸ் அதை விரும்பாத நிலையில், சமரச முயற்சி சாத்தியமாகுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இப்பொது, இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்தன. இந்தச் சூழலில் தைலாபுரத்தில் இன்று சந்திப்பு நிகழவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவின் சைதை துரைசாமியுடன், பாஜக பிரமுகரான ஆடிட்டர் குருமூர்த்தி, தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாஸை சந்தித்துள்ளார். அப்போது, திடீரென அன்புமணியும் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, ராமதாஸ் உடனான சந்திப்புக்கு பின், இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ”பாமக தலைவர் ராமதாஸ் என் நண்பர் என்பதால், அவரை சந்தித்தேன். பாஜக சார்பாக எல்லாம் அவரை சந்திக்கவில்லை. தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வந்தது பற்றி எனக்கு தெரியாது என்றும், அன்புமணி இங்கு வந்தாரா என அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியிடம் ஷாக்-ஆக கேட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!
June 6, 2025
அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
June 6, 2025