சென்னையில் காதலி பேச மறுத்ததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை.!

சென்னையில் காதலி பேசவில்லை என்று மனமுடைந்த காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பீர்க்கன்கரணை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தவர் டில் பகதூர் இவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் மேலும் சென்னை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார் , இந்த நிலையில் தனது சொந்த ஊரில் டில் பகதூர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது அந்த பெண்ணிடம் அடிக்கடி பேசியதால் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் திடீரென காதலி டில் பகதூர் உடன் பேசுவதை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது, மேலும் இதனால் மன முடைந்த டில் பகதூர் தனியார் கல்லூரியின் வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனைக் கண்ட அங்குள்ள ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர் .
இந்நிலையில் மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக டில் பகதூர் உடலை அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025