கொச்சையாக பேசிய கடம்பூர் ராஜீவை வரலாறு மன்னிக்காது என்று திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் செயல் தலைவராக இருந்தமு.க ஸ்டாலின் போட்டியின்றி திமுகவின்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
unknown nodeஇந்நிலையில் கருணாநிதி மறைவையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்படும் என்றும் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அப்போது தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்தார் .அவர் கூறுகையில், கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை. மேல்முறையீடு செய்திருக்கலாம், ஆனால் நாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
unknown nodeஇந்நிலையில் தற்போது திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கலைஞர் கருணாநிதி நினைவிட விவகாரம் குறித்து கொச்சையாக பேசிய கடம்பூர் ராஜீவை வரலாறு மன்னிக்காது என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.