சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 21.09.2024) அதாவது சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்… கோவை காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் […]
சென்னை : மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை செயல்படுத்த தற்போது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல், அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்ததற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என திமுக உட்பட பல்வேறு கட்சியினர் […]
சென்னை : விசிக நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாடு தான் தற்போது தமிழக அரசியலில் ‘ஹாட் டாபிக்’-காக மாறியுள்ளது. வரும் அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்மொழியாக அழைப்பு விடுத்தார். அப்போது, ‘விருப்பம் இருந்தால் அதிமுகவும் கலந்து கொள்ளலாம்.’ என கூறினார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவனின் பேச்சு அரசியல் […]
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, துணை முதல்வராக அறிவிக்க கோரி திமுகவினர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக மூத்த நிர்வாகிகளே இந்த கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிலும் துணை முதல்வர் கோரிக்கையை முதலமைச்சர் முன்னிலையிலேயே முன்வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பேசுபொருளாக இருந்த இந்த துணை முதல்வர் விவகாரம், நேற்று விஸ்வரூபம் எடுத்தது. நேற்று திமுக தலைவரும் தமிழக […]
டெல்லி : கடந்த 2014-ம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். ஆனால், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருவதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடத்தத் தேவையான பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை இக்குழுவினர் […]
சென்னை : நேற்று தந்தை பெரியார் பிறந்த தினத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் பெரியாரின் கூற்றுகளை நினைவுகூர்ந்து தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதே போல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டிருந்தார். இந்த வாழ்த்துப் பதிவை அடுத்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் , சென்னை பெரியார் திடலுக்கு வந்த அக்கட்சி தலைவர் விஜய் , அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் […]
சென்னை : பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி இன்று அதிகாலை வியாசர்பாடி அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் நிலுவையில் இருந்து வருகிறது. தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் தான், சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள BSNL குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது காக்கா தோப்பு பாலாஜி சிக்கியுள்ளார். அப்போது […]
சென்னை : இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மூத்த அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு மற்றும் திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா என மூத்த திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின் எந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தும், அமைச்சரவை மாற்றம் குறித்தும், குறிப்பாக திமுகவினர் மத்தியில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 20.09.2024) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்… சென்னை தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், செகனியம், ராக்கம்பாளையம், பூங்குளம் மற்றும் கல்லூர் கிராமம் அலினிஜிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர். […]
சென்னை : தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பில் உள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் எனும் பொறுப்பில் அமரவைக்கப்படுவார் என்ற செய்தி அவ்வப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்ளவதற்கு முன் “துணை முதலமைச்சர்” குறித்த சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என பலரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், அதுபற்றி எந்த அறிவிப்பையும் அறிவிக்காமல், முதலமைச்சர் தனது அமெரிக்க […]
புதுக்கோட்டை : சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் சீமான், தவெக கட்சியின் தலைவர் விஜய் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசி இருக்கிறார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘விஜய், மக்கள் தலைவர்களான பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு மாலை அணிவித்ததை எப்படி பார்க்கிறிர்கள்?’ என சீமானிடம் கேள்வி […]
சென்னை : இந்திரா காந்தி போலவே ராகுல் காந்தியும் கொல்லப்படுவார் என்று பா.ஜ.க.வினர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயக நாட்டில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியும் இருக்கிறார். சமீபத்தில், எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை குறித்து, பாஜக தலைவர் ஒருவர்,” அவரது பாட்டிக்கு நேர்ந்த கதி தான் அவருக்கும் நேரும் எனவும் அவரது நாக்கை வெட்டுபவர்களுக்கு 11 லட்சம் ரூபாய் […]
சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது . பூரண மதுவிலக்கு என்பது இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த மாநாடு பற்றி அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், மதுவுக்கு எதிராக குரல் கொடுக்க யார் வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளலாம். அதிமுகவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம் எனக் கூறியிருந்தார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுகவுக்கு […]
சென்னை : 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக உள்ள பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று சென்னை வியாசர்பாடி அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி, பிரபல ரவுடிகளின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். கடந்த 2009இல் ரவுடி சதீஸ் கொலை வழக்கு உட்பட ரவுடி பில்லா சுரேஷ், ரவுடி விஜி, ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பா […]
சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள், தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்தநாள் என இன்று திமுக முப்பெரும் விழாவானது சென்னை ஒய்.எம்.சி.ஆர் மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்த முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில், மேடையில் இரண்டு பெரும் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு இருக்கையில் திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமர்வார் என அனைவருக்கும் […]
சென்னை : கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேருக்குக் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டிருப்பதாகவும் அவர்களைத் தனிமைப்படுத்தி அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே, கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு எல்லைக்குள் ‘நிபா வைரஸ்’ நோய் […]
சென்னை : திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை எனவும் தேசிய சாயலில் தான் தமிழ்நாட்டில் கட்சி வர வேண்டும் எனவும் தமிழிசை சவுந்தராஜன் பேசி இருக்கிறார். முன்னதாக சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழிசை பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தவெக கட்சி தலைவரான விஜயையும் விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து […]
சென்னை : எழும்பூர் அருகே வேப்பேரி பகுதியில் உள்ள பெரியார் திடல் சென்று தன்னை ஒரு முழு அரசியல்வாதி என நிரூபித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். ஆம், கட்சி அறிவிப்புக்கு பின் முதல்முறையாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு விஜய் தனது காரில் ஏறி செல்வதற்கு முன், திமுக ஆதரவாளர், பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பொதுவெளியில் தலைவர் ஒருவரின் சிலைக்கு விஜய் மரியாதை […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 19.09.2024) வியாழன் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..! கோவை சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர் கடலூர் சிற்றரசூர், முத்துகிருஷ்ணாபுரம், […]
சென்னை : பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். சாதி, மத ஆதிக்கம், மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர் பெரியார் என்று நினைவுகூர்ந்தார். பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ் என்று போற்றப்பட்ட அவரது பிறந்தநாளில், சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக விஜய் தனது அறிக்கையில், ” சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த […]