விருதுநகர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் விருதுநகர் மாவட்டம் சென்று அங்கு கட்சி நிகழ்வுகள் மற்றும் அரசு நல திட்டங்களை துவங்கி வைக்க உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் சென்ற முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து, கன்னிச்சேரிபுதூர் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலவர் மு.க.ஸ்டாலின். பிறகு, பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் […]
மதுரை : இன்று மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தை பார்வையிட்டார். அப்போது அரசு அதிகாரிகளிடம் இப்பணிகள் குறித்த விவரங்களை அறிந்து கொண்டார். மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் எப்போது முடியும் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மழை பெய்வதால் பணிகள் தாமதமாகி வருகிறது என கூறியதால் , “மழை பெய்யத்தான் செய்யும். அப்புறம், மதுரை முழுக்க […]
சென்னை : திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார். இதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திராவிடம் என்பது தமிழ் தேசிய மக்களை ஆள வேண்டும் என நினைப்பது, தமிழ் தேசியம் என்பது மற்ற மொழி பேசும் மக்களை போல தமிழ் பேசும் மக்களும் வாழ வேண்டும் என்பது இரண்டும் எப்படி ஒன்றாகும், விஷமும், விஷமுறிவு […]
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஓர் உதவி மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள் பற்றிய விளக்கங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வெளியான அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாண மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்லி நிறுவனங்களிலும் […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிடுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான சின்னத்திரை நடிகை எஸ்தர், திரைத்துறையினருக்கு போதைப் பொருள் சப்ளை செய்தாரா என […]
சென்னை : கடந்த நவ-6ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருந்த நிலையில் கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சியால் தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது. இதனால், மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவி வந்த காற்று சுழற்சி வலு இழந்ததால் நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது […]
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர் திமுகவில் செய்தி தொடர்பு துணைச் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது 3-வைத்து மகன் வெங்கட்ராம் திருமணம் திருப்பதியில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நேரத்தில், மலையில் இருந்து இறங்கிய போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த துயரைச் சம்பவம் […]
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற கருத்தரங்களில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். இன்று மாலை 6.30 மணி அளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், “நான் 15 வயது இருக்கும் போது முத்தமிழறிஞர் கலைஞரின் பராசக்தி திரைப்பட வனங்கள் கேட்டபோது, தமிழின் மீது ஆர்வம் வந்துவிட்டது. கலைஞர் மீது காதல் வந்துவிட்டது. “ஈழ விடுதலைக்கு […]
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கு திடல் மற்றும் பார்க்கிங்காக நிலம் தந்த விவசாயிகளை அழைத்து நன்றி கூறும் வகையில் விருந்தும் வழங்கிட தவெக தலைவர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அட ஆமாங்க.. தவெக மாநாட்டுக்காக பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக […]
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்கேயே அவர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதிமுக பிளவுபட்டபோது ஓபிஎஸ் அணியில் இருந்த அவர், கருத்துவேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். அவருக்கு சமீபத்தில் தான், […]
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை, நெல்லையில் திரையரங்கை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள திரையரங்கையும், நெல்லையில் அலங்கார் திரையரங்கையும் முற்றுகையிட்டனர் எஸ்டிபிஐ கட்சியினர். இதில், கோவை சாந்தி திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்த நிலையில், அமரன்’ படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை தமிழ்நாடு […]
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும் வகையில் நவ.1ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதனை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமையான நாளை, வழக்கம்போல் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அரசு அலுவலகங்களும் செயலம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மின் கட்டணம் செலுத்தலாம் மேலும், தமிழக மின் வாரிய அலுவலகங்களுக்கு 2 மற்றும் 4வது சனிக்கிழமைகள் எப்போதும் […]
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர் (09/11/2024) சனிக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். செங்கல்பட்டு 110/33-11 KV திருப்போரூர், 110/33-11 KV SS/அச்சரப்பாக்கம், 110/33-11 KV ஆலத்தூர் தருமபுரி ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, தென்கரிக்கோட்டை, பூதானந்தம் ஹரூர், மோபிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சண்டப்பப்பட்டி, […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய […]
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 3 மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, […]
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில், “தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல […]
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு நாம் தமிழர் கட்சியினர் மட்டுமல்லாது பலரும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சீமான் பிறந்தநாளுக்கு தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிடுகையில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் […]
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக – அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோ வெளியான போது திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கள், தவெக முதல் மாநாட்டில் விஜய் இதே கருத்தை கூறுகையில், தவெக – விசிக கூட்டணி பேச்சுக்கள் என விசிக கூட்டணி பற்றி அவ்வப்போது தமிழக அரசியலில் பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த பல்வேறு யூகங்களுக்கு பதில் அளிக்கும் […]
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல் (தை 1) கொண்டாடப்படுகிறது. அதே போல, வடமாநிலங்களில் சூரியனை வணங்கும் விதமாக சத் பூஜையானது (Chhat Puja) ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொண்டாப்படுகிறது. முதலில் பீகார், உத்திர பிரதேசம், நேபாளம் ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகையானது தற்போது பெரும்பாலான வடமாநிலங்களில் சூரியனை வணங்கும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சென்னை பகுதியில் வசிக்கும் […]
சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. நவ. 12,13ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை(09-11-2024) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.