சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க சாவடியிலும் சுங்க கட்டணமானது உயர்த்தப்பட்டது. வாகனத்தின் வகையை பொறுத்து ரூ.5 முதல் ரூ.120 வரையில் உயர்த்தப்பட்டது. சுங்கக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் இன்று (செப்டம்பர் 16) போராட்டம் நடைபெறும் என் முன்னதாக அறிவிக்கப்ட்டது. அதன்படி, செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ம.ம.க கட்சித்தலைவர் ஜவார்ஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் […]
கோவை : கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுக வாக்குறுதிகளில் கோவையில் முக்கிய வாக்குறுதியாக, அங்கு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்பதாகும். இதற்கான நடவடிக்கையில் திமுக அரசு உடனடியாக களமிறங்கியது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் உடனடியாக தேர்வு செய்யப்பட்டது. அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். கோவை ஒண்டிபுதூர், L&T நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 18.09.2024) புதன் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..! கோவை கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் தண்ணீர்பந்தல், […]
சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு இதற்கு முன் அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், அக்டோபர்-2 ம் தேதி நடைபெற உள்ள இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவும் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு தற்போது திருமாவளவன், திமுக இந்த மாநாட்டில் பங்கேற்கிறது என தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் சந்தித்து அழைப்பு விடுத்த பிறகு […]
சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது, தனது கட்சிக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு” என பேசியது, மதுரையில் விசிக கொடி கம்பம் அகற்றப்பட்டு பின்னர் அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் என விசிக – திமுக இடையே ஓர் விரிசல் போக்கு நிலவியதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் தான், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பானது […]
சென்னை : தற்போதைய தமிழக அரசியலில் தலைப்புச் செய்தியாக மாறி இருப்பது ‘விசிக – திமுக’ கூட்டணி தான். விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி சார்பாக நடத்தவுள்ள மதுஒழிப்பு மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ளலாம், விருப்பம் இருந்தால் அதிமுகவும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்து இருந்தார். திமுக கூட்டணியில் உள்ள விசிக, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. திமுக – விசிக கூட்டணியில் விரிசல் என பலரும் பேசிக்கொண்டு இருக்க, […]
சென்னை : தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அ லைமோதுகிறது. முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடிக்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளால் நாளை (15.09.2024) காலை […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சியில், பேச்சாளர் மகா விஷ்ணு ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றிய சர்ச்சை கருத்துக்களையும், மாற்றுத்திறனாளிகள் குறித்து கடுமையான கருத்துக்களையும் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு விமர்சனம் செய்திருந்தார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த மாகா விஷ்ணு பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு […]
சென்னை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை வந்திருந்தார். அப்போது சிறுகுறு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அன்னப்பூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தது முதல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு வரையில் சமூக வலைதளத்தில் டாப் ட்ரெண்டில் இருக்கிறார் நிர்மலா சீதாராமன். ஸ்வீட் – காரம் : கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவையில் நடைபெற்ற சிறுகுறு, நடுத்தர மற்றும் ஹோட்டல் தொழிலதிபர்கள் உடனான […]
மதுரை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்ட போது, அக்கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை, K.புதூர் பகுதியில் முதல் முதலாக அக்கட்சி கொடியை ஏற்றினார். அப்போது 20 அடி உயர கம்பத்தில் இந்த கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டது. இக்கட்சி கொடி கம்பமானது, அண்மையில் புதுப்பிக்கப்பட்டு அதன் உயரம் 20 அடியில் இருந்து 62 அடியாக உயர்த்தப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. 62 அடியாக உயர்த்திய கொடி மாநகராட்சியில் கம்பத்திற்கு உரிய அனுமதி வாங்கவில்லை எனக்கூறி, நேற்று நள்ளிரவு 1 […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக சான் பிராசிஸ்கோ , சிகாகோ சென்றிருந்த முதல்வர், அதுகுறித்த பல்வேறு தகவல்களை இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா.? அமெரிக்கா செல்வதற்கு முன்னர் மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறியிருந்தீர்கள். ” என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த […]
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று நடைபெற்ற அவரது கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “எதிர்த்து பேசக்கூடாது , போராடக்கூடாது, கல்வியில் உயர்ந்துவிட கூடாது, உயர்ந்த பதவிக்கு வர ஆசைப்படக்கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாது என்று இருந்த நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பற்றிய குரலை உயர்த்தினார்களோ […]
சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று காலை முதலமைச்சர் சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை நேரில் […]
சென்னை : கோவையில் நடைபெற்ற தொழிலதிபர்கள் நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்னபூர்ணா சீனிவாசன், வெவ்வேறு உணவு பொருட்களின் மீது வெவ்வேறு ஜி.எஸ்.டி வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது எனக்கூறி அதனை முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து , இன்று காலையில் கோவை நட்சத்திர ஹோட்டலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் , அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியானது. […]
சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், கோவையை சேர்ந்த அன்னபூர்ணா சீனிவாசன் எனும் ஹோட்டல் அதிபர் ஜி.எஸ்.டி குறித்து தனது கோரிக்கையை வெளிப்படையாக கேட்டது, அதன்பிறகு இன்று அன்னபூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோக்கள் ஆகியவை வெளியாகி தற்போது தமிழக அரசியல் முதல் இந்திய அரசியல் வரையில் பேசுபொருளாக மாறியுள்ளது. கோவையில் நடைபெற்ற சிறுகுறு மற்றும் ஹோட்டல் அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா சீனிவாசன் கேள்வி எழுப்பியதால், அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட […]
சென்னை : சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் (செப்டம்பர் 12, 2024) இரவு மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் திமுக அரசுப் பொறுப்பேற்ற கடந்த 40 மாதங்களில் சமூக விரோத குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக சென்னை […]
சென்னை : மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையில் முழுவதுமாக பல இடங்களில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது . திடீரென நேற்று நள்ளிரவு மின்தடை சென்னை முழுவதும் ஏற்பட்டதன் காரணமாக, மக்கள் மின்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இரட்டை மின் ஆதாரங்கள் செயலிழந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது எனவும், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது எனவும் […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோ புறப்பட்டார். அடுத்த நாள் ஆகஸ்ட் 28இல் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க, தங்கள் தொழிலை விரிவுபடுத்த அழைப்பு விடுத்தார் […]
மதுரை : தமிழகத்தில் குட்கா , கூல் லிப் போன்ற போதை பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தாலும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இந்த போதை வஸ்துக்கள் சகஜமாக கிடைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தடுத்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கைது, வழக்குபதிவு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இந்த போதை வஸ்துக்களின் பயன்பாடு முற்றிலும் அழிந்தபாடில்லை. இதனைக் குறிப்பிட்டு, இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை கருத்தை பதிவிட்டார். குட்கா […]