நளினி தரப்பில் பரோலை நீட்டிக்கக்கோரி மீண்டும் மனு

நளினி தரப்பில் பரோலை நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,நளினி,சாந்தன்,முருகன்,ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார்,ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதில் நளினி தனது மகளின் திருமணத்தையொட்டி பரோல் கோரி மனு தாக்கல் செய்தார்.இதில் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதற்கு பின்னர் மீண்டும் தனது பரோல்லை நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்தார்.அதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.ஏற்கனவே கொடுக்கப்பட்ட பரோலுடன் சேர்த்து மேலும் 3 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் நளினி சார்பில் மீண்டும் தனது பரோலை நீட்டிக்கக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தமனுவில் அக்டோபர் 15-ஆம் தேதி பரோலை நீட்டிக்கக்கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்நது இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025