பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் பீல்ட் மாஷ்சலாக பதவி உயர்வு பெற்றார். அயூப் கானுக்கு பிறகு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்ற ராணுவ தளபதி ஆனார் அசிம் முனீர்.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் வரலாற்றில் இரண்டாவது பீல்ட் மார்ஷலாக COAS ஜெனரல் அசிம் முனீர் ஆனார். அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவி ஃபீல்ட் மார்ஷல் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக போரில் வெற்றிபெற்ற ராணுவத்தின் தளபதிக்கு பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால், பாகிஸ்தானிலோ, இந்தியாவிடம் அடிவாங்கியதை சர்வதேசத்திடம் மறைக்க, அந்நாட்டின் தளபதிக்கு பாகிஸ்தான் அரசு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அயூப் கான் 1959-1967 க்கு இடையில் இந்தப் பதவியை வகித்தார். இந்திய இராணுவத்திடம் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு ஜெனரல் முனிருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவுடனான மோதலின் போது பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி விமானப்படைத் தளபதி ஜாகீர் அகமது பாபர் சித்துவின் சேவைப் பதவிக் காலத்தை பாகிஸ்தான் அரசு ஒருமனதாக நீட்டித்தது.
யார் இந்த அசிம் முனீர்?
லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் பாகிஸ்தானில் ஒரு சிறந்த அதிகாரியாகக் கருதப்படுகிறார். லெப்டினன்ட் ஜெனரல் முனீர் மங்களாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி திட்டத்தின் மூலம் இராணுவப் பணியில் நுழைந்து எல்லைப் படை படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார்.
அவர் ஜெனரல் பஜ்வாவின் நெருங்கிய உதவியாளராக இருந்து வருகிறார், அவர் பதவி விலகும் இராணுவத் தலைவரின் கீழ் ஒரு பிரிகேடியராக ஃபோர்ஸ் கமாண்ட் வடக்குப் பகுதிகளில் வீரர்களுக்குத் தலைமை தாங்கியதிலிருந்து, அவர் அப்போது எக்ஸ் கார்ப்ஸ் தளபதியாக இருந்தார்.