காசா : இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காஸாவில் உணவுப் பற்றாக்குறை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவில் ரூ.5 மதிப்புள்ள பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் சுமார் ரூ.2,500 (24 யூரோ) என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஒரு துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய 2023 அக்டோபர் முதல், காஸாவில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வாழும் மக்கள் அன்றாட உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய […]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட முக்கியமான காரணமே ட்ரம்ப் கொண்டு வந்த One Big Beautiful Bill என்ற பொருளாதார மசோதா தான். டிரம்ப் இந்த மசோதாவை கொண்டுவந்தவுடனே இந்த மசோதாவில் பெரிய அளவிலான வரிக் குறைப்புகள் இருந்தன, ஆனால் இதனால் நாட்டின் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது பேசுபொருளாக வெடித்துள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் மஸ்க், டிரம்பின் பிரச்சாரத்துக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதியுதவி செய்து, அவரது வெற்றிக்கு பெரிதும் உதவினார். ஆனால், இப்போது டிரம்ப், மஸ்க்குடன் பேச விருப்பமில்லை என்றும், அவரது நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான […]
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை ராஜ் ஷாமானி என்பவர் நேரடியாக சந்தித்து பேட்டி எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒன்பது வருடங்களாக ஊடகங்களில் இருந்து விலகி இருந்த மல்லையா, இந்த பேட்டியில் தன் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளார். அந்த பேட்டியில் அவர் தனது வாழ்க்கை, வணிகம், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் சரிவு, ஊழியர்களின் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் சட்டப் போராட்டங்கள் […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தலில் மஸ்க் டிரம்பை வெளிப்படையாக ஆதரித்து வந்தார். மஸ்க் தனது சமூக ஊடக தளம் மூலம் டிரம்பிற்கு ஆதரவாக ஒரு பெரிய பிரச்சாரத்தை நடத்தினார் மற்றும் பொது பேரணிகளில் கலந்து கொண்டார். இதற்காக மஸ்க்கிற்கு வெகுமதியும் வழங்கப்பட்டது மற்றும் அவருக்கு DOGE பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் டிரம்பின் லட்சியமான […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,ஒரு உத்தரவு மூலம் சில நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் வர தடையும், சில நாடுகளுக்கு கட்டுப்பாடுகளும் விதித்தார். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் உள்ளது. இந்தத் தடைகள், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும் விதிக்கப்பட்டவை. எந்தெந்த நாடுகள் இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம். முழுமையான தடை உள்ள நாடுகள் (சிவப்பு பட்டியல்) ழுமையான பயணத் தடை (Red List) விதிக்கப்பட்ட 12 நாடுகள் ஆப்கானிஸ்தான், […]
ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று, ஜூன் 2, 2025 அன்று இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளன. 2022-ல் தொடங்கிய அவர்களது போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இது இரு நாடுகளும் நேரடியாகப் பேசும் இரண்டாவது முயற்சியாகும். முதல் சுற்று பேச்சுவார்த்தை கடந்த மே 16, 2025 அன்று இதே இஸ்தான்புலில் நடந்தது. அப்போது பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும், கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஒரு சிறிய ஒப்பந்தம் மட்டும் ஏற்பட்டது. […]
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அந்த வீடியோ 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 5,000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்தது. மேலும், அதிர்ச்சியூட்டும் எதிர்வினைகளையும் இணையத்தில் கடுமையான விவாதங்களையும் ஈர்த்தது. சுற்றுலாப் பயணிகளுக்கான கவர்ச்சிகரமான அனுபவங்களாக பெரும்பாலும் சந்தைப்படுத்தப்படும் இந்த இடங்கள், பார்வையாளர்கள் முழுமையாக வளர்ந்த புலிகளுடன் உணவளிக்க, […]
வாஷிங்டன்: டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி வரிகளை விதித்ததாக அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவற்றை உடனடியாகத் தடை செய்ய உத்தரவிட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வரிவிதிப்பை நிறுத்திவைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என தடையை நீக்கியது மேல்முறையீட்டு நீதிமன்றம். இந்த நடவடிக்கை, டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் இயற்றப்பட்ட பல வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அறிவித்த ஒரு […]
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர் அல் மஹ்தி என்ற இளைஞர், இஸ்லாமின் முக்கியமான கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தை மேற்கொள்ள மக்காவிற்கு செல்ல தயாரானார். இவரது பயணம் லிபிய அரசாங்கத்தின் மானியத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சப்ஹா விமான நிலையத்தில், அவரது பாஸ்போர்ட்டில் உள்ள “அல் மஹ்தி” என்ற பெயர் பாதுகாப்பு சோதனைகளில் தாமதத்தை ஏற்படுத்தியது. இதனால், அமீர் […]
வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். அவர் ட்ரம்பின் பிரசாரத்திற்கு நிதி உதவி வழங்கியதுடன், அவரது நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, ட்ரம்ப் 2025 ஜனவரியில் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற பிறகு, அரசின் செலவுகளைக் குறைப்பதற்காகவும், நிர்வாகத்தை […]
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. மாறி மாறி இரண்டு நாடுகளும் தாக்கி கொண்டு இருப்பதால் இந்தப் போர் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கின்றன. ஒரு பக்கம் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த பதற்றமான சூழலில், புதின் உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் […]
பிரிட்டிஷ் : முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது 60ஆவது வயதில் ஒன்பதாவது முறையாக தந்தையானார். இவரது மனைவி கேரி ஜான்சன், மே 21, 2025 அன்று பிறந்த தங்கள் மகள் பாப்பி எலிசா ஜோசஃபின் ஜான்சனின் பிறப்பை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் பற்றி அவர், “பாப்பி மிகவும் அழகாகவும் சிறியவளாகவும் இருக்கிறாள், நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளோம்” என்று குறிப்பிட்டார். இந்தக் குழந்தை, போரிஸ் மற்றும் கேரி தம்பதியரின் நான்காவது […]
பாகிஸ்தான் : பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தெஹ்ரானில் ஈரான் அதிபருடனான சந்திப்பின்போது தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம், சிந்து நதி நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாகவும் அவர் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” காஷ்மீர், பயங்கரவாதம், சிந்து நதி நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளையும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க […]
பிரான்ஸ் : அதிபர் இமானுவேல் மேக்ரனும் அவரது மனைவி பிரிஜ்ஜிட் மேக்ரனும் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டபோது, மே 26 அன்று ஹனோய் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் தரையிறங்கியபோது, பிரிஜ்ஜிட் மேக்ரன் தனது கணவர் இமானுவேல் மேக்ரனை கன்னத்தில் அறைந்ததாகவும், பின்னர் விமானப் படிக்கட்டுகளில் இறங்கும்போது அவரது கையைப் பிடிக்க மறுத்ததாகவும் சமூக ஊடகங்களில், வீடியோ ஒன்று பரவி கொண்டு இருக்கிறது. முதலில், பிரான்ஸ் அதிபரின் அலுவலகமான எலிசி […]
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம் என இந்தியா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார். எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம் என அவர் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்தது பேசியிருக்கிறார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே 21 அன்று சந்தித்தார். இந்த சந்திப்பு, அமெரிக்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே உறவை வலுப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இது வழக்கமான சந்திப்பாக இல்லாமல், டிரம்பின் ஒரு குற்றச்சாட்டால் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஏனென்றால், சந்திப்பின்போது, டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக “இனப்படுகொலை” நடப்பதாகக் கூறினார். “இனப்படுகொலை” என்றால், ஒரு இனத்தை முறையாக […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்’ அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது 2029 ஆம் ஆண்டில் அவரது தற்போதைய பதவிக்காலத்தின் இறுதிக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிஸ்டிக், ஹைப்பர் சோனிக் ஏவுகனைகளை அழிக்கும் வல்லமை கொண்ட `கோல்டன் டோம்’ கேம் சேஞ்சராக இருக்கும் என்றும் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பே ரொனால்ட் ரீகன் (40வது அமெரிக்க ஜனாதிபதி) இந்த திட்டத்தை செயல்படுத்த […]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றில் இரண்டாவது பீல்ட் மார்ஷலாக COAS ஜெனரல் அசிம் முனீர் ஆனார். அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவி ஃபீல்ட் மார்ஷல் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக போரில் வெற்றிபெற்ற ராணுவத்தின் தளபதிக்கு பதவி […]
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதாம். சிங்கப்பூரில் மட்டும் 14,200 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் கொரோனாவிற்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இதன் தாக்கம் தீவிரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைந்து […]