வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!
நேற்றைய தினம் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் படுதோல்வியுற்ற ராஜஸ்தான் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து 2-வது அணியாக வெளியேறியுள்ளது.

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு செய்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை அணி அதிவேகமாக ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன்(61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடித்து அசத்தினர்.
அடுத்த வந்த சூர்ய குமார் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் அதிரடிகாட்ட ரன்கள் ராக்கெட் வேகத்தில் ஏறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை மும்பை குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரில் சூர்யவன்சியையும், 2-வது ஓவரில் ஜெய்ஸ்வாலையும் இழந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் இறுதியில், ராஜஸ்தான் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 7 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது மும்பை அணி. அதிலும் குறிப்பாக, கடந்த போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகையை திரும்பி பார்க்க வைத்த அசத்திய வைபவ் சூர்யவன்ஷி நேற்றைய தினம் சொதப்பினார்.
தீபக் சாகர் வீசிய 4-வது பந்தில் கேட்ச் கொடுத்து வைபவ் டக் அவுட்டானர். கடந்த போட்டியில் 200 ரன்களுக்கு அதிகமான டார்கெட்டை 15 ஓவர்களில் ராஜஸ்தான் சேஸ் செய்ததால் இந்த போட்டியிலும் அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கம் அதற்கு மாறாக அமைந்துள்ளது.
11 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து 2-வது அணியாக வெளியேறியுள்ளது. அதிலும், நேற்று சென்னை முதலாவது அணியாக வெளியேறிய அடுத்த நாளே இது நிகழ்ந்துள்ளது.
அதோடு சோகச் செய்தி என்னெவென்றால், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தான் 2008 ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர் என்பது தான்.