“என்னோட மகன் வெற்றிக்கு யுவராஜ் சிங் தான் காரணம்”…அபிஷேக் சர்மா தந்தை உருக்கம்!
அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மா, தனது மகனின் வளர்ச்சிக்கு யுவராஜ் சிங் அளித்த பங்களிப்பைப்பு குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் அதிரடி காண்பித்து ரசிகர்களை மகிழ்வித்தார்கள் என்று சொல்லலாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மிகவும் சிறப்பாக விளையாடினார் என்று சொல்லலாம். இந்த சீசனில் மட்டும் மொத்தமாக 439 ரன்கள் எடுத்துள்ளார். இந்த அளவுக்கு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவருக்கு அடுத்ததாக இந்திய அணி சார்பாக முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
இந்த சூழலில், இளம் வீரர் அபிஷேக் ஷர்மாவின் அபாரமான ஆட்டத்திற்கு பின்னால், முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்ததாக அவரது தந்தை ராஜ் குமார் ஷர்மா தெரிவித்துள்ளார். அபிஷேக்கின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது, மேலும் அவரது வெற்றிக்கு யுவராஜின் வழிகாட்டுதல் முக்கிய காரணமாக இருந்தது.அது எப்படி என்று அபிஷேக் ஷர்மாவின் தந்தை கூறியதை வைத்து பார்ப்போம்.
இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது அபிஷேக் சர்மா ” யுவராஜ் அபிஷேக் மீது கடுமையாக நம்பிக்கை வைத்து அவருக்கு உத்வேகம் அளித்தார், அதேபோல அபிஷேக்கு தேவையான அணைத்து விஷயங்களையும் சொல்லிக்கொடுத்தார். இந்த நேரத்தில் நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அதைப்போல, என் மகனின் கடின உழைப்பு எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. அவரது முயற்சிகள் அவரை முன்னோக்கி கொண்டு செல்கின்றன. இந்த விளையாட்டு முழுக்க முழுக்க செயல்திறனைப் பற்றியது, செயல்படுத்துபவர்கள் முன்னேறுவார்கள்” எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மேலும் பேசிய அவர் ” SRH மிகவும் நல்ல அணி. ஆனால், இந்த ஆண்டு ஏன் அவர்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்று எனக்கு புரியவில்லை.
ஐபிஎல் தொடங்கியபோது, அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நினைத்தோம். இருந்தாலும் பரவாயில்லை, அடுத்த ஆண்டு வழக்கமான பாணியில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவிப்பார்கள் என நம்புகிறேன்” எனவும் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.