மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உடல்நிலை சரி இல்லாத நிலையிலும் தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் சக்கர நாற்காலியில் வந்து, தன்னுடைய வாக்கை பதிவு செய்துள்ளார்.