இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகம் தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகள் போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை மட்டமாக்கப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தி பயங்கரவாதிகள் முகாம் முற்றிலும் தகர்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் புகைபடம் வெளியாகியுள்ளது.இந்த படத்தை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
unknown nodeunknown nodeunknown nodeunknown node