டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இரண்டு நாடுகளும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்து போரை நிறுத்தியது. அப்படி இருந்தும் கூட இன்னும் பரபரப்பு குறையவில்லை என்று சொல்லலாம். ஏனென்றால், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு […]
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த இடங்கள் பாகிஸ்தான் ராணுவம் கூட எதிர்பார்க்காத பகுதிகள் என்று கூட சொல்லலாம். இந்திய வீரர்கள் துணிச்சலாகச் சென்று, துல்லியமாகத் தாக்கி, பயங்கரவாதிகளை ஒழித்தனர். இந்த வெற்றி, இந்திய ராணுவத்தின் பயிற்சியையும், வலிமையையும் உலகிற்கு காட்டியது மட்டுமின்றி நமது நாடு பாதுகாப்பில் உறுதியாக இருப்பதை […]
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல் 12ம் தேதி வரை தீவிரம் குறைந்து காணப்படும். தற்பொழுது, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து NDRF விரைந்துள்ளது. இந்நிலையில், மழை தொடர்பான […]
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி, தங்க நகைக் கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும். தனிநபர்கள் 1 கிலோ வரை மட்டுமே அடகு வைக்க முடியும். தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே நகைக் கடன் வழங்கப்படும். நீங்கள் வழங்கும் நகை 22 காரட் (அ) அதற்கு மேல் இருக்க வேண்டும். இந்த புதிய […]
சென்னை : ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், “அழைத்தால் பிரசாரத்துக்காக தமிழகம் வருவேன்” என்று பேசியிருக்கிறார். சென்னையில் 2025 மே 26 அன்று பாஜக சார்பில் நடைபெற்ற “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் “தமிழகம் சித்தர்களின் புனித பூமியாகவும், முருகனின் தெய்வீக பூமியாகவும் விளங்குகிறது. இது வீரமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு பெயர் பெற்ற மண்ணாகும். “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து […]
குஜராத் : 2 நாள் அரசு முறைப் பயணமாக குஜராத்தின் வதோதராவில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்தினார். ஆபரேசன் சிந்தூரின் வெற்றியைத் தொடர்ந்து முதல்முறையாக குஜராத் சென்ற பிரதமருக்கு சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளில் குஜராத்தின் தாஹோத்தில் கட்டமைக்கபட்ட ரயில் எஞ்சின்கள் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், தாஹோடிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், நாட்டின் முதலாவது 9000 எச்.பி.(HP) திறன் […]
திருவனந்தபுரம் : கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த MSC ELSA 3 என்ற சரக்குக் கப்பல் நேற்று முன்தினம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் மொத்தமாக 25 பேர் இருந்த நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்தனர். கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் ப பணிகள் தீவிரமடைந்துள்ளது. சரக்கு கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தை சுற்றி கடலோர காவல் படை, சிறிய விமான […]
கொச்சி : தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, கனமழை எச்சரிக்கை காரணமாக 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெள்ளப்பெருக்கு, பயண இடையூறுகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாக மாநிலம் முழுவதும் […]
டெல்லி : நேற்று முன் தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு கொங்கன் கடற்கரையை கடந்தது. பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து. தற்பொழுது, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். இதன் காரணமாக, மே 28 முதல் மே 30 வரை மத்திய மற்றும் வடக்கு வங்காள […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கூட்டம், ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு, பீகாரின் நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கிய முதல்வர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, ஆளுமை மேம்பாடு, மற்றும் […]
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இது 10-வது ஆண்டு நிதி ஆயோக் கூட்டம். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சில முக்கிய விஷயங்களை பற்றியும் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரு குழுவாக […]
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லையை தாண்டிய பிறகு எல்லை வேலியை தாண்ட அந்நபர் முயற்சி செய்யும் வேலையில், BSF வீரர்கள் அவரை எச்சரித்தும் முன்னேறியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும், இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்களுக்கும் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் […]
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கமாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் பரவக்கூடும். இது செப்டம்பர் 17 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி முழுமையாக விலகும். கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 […]
டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி, நீண்ட கால திட்டங்கள் ஆகியவற்றை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்தும் வகையில் நிதி ஆயோக் பணியாற்றும். துறைகளுக்கு இடையேயான பிரச்சனை, மாநிலங்களுக்கு தேவைப்படும் நிதி, சந்திக்கும் சவால்கள் பற்றி விவாதிக்க நிதி ஆயோக் வழிவகுக்கிறது. மாநிலங்களை வலுப்படுத்தி நாட்டை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு […]
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் உள்ள பிரபலமான இனிப்புக் கடையான தியோஹர் ஸ்வீட்ஸ், முன்பு “பாக்” என்ற பெயரை கொண்டிருந்த அதன் இனிப்புகளின் பெயரை மாற்றியுள்ளது. உதாரணமாக, மைசூர் பாக் இப்போது இந்த கடையில் மைசூர் ஸ்ரீ என்று அழைக்கப்படும். மேலும், மோதி பாக், ஆம் பாக் மற்றும் […]
டெல்லி : கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 220 பேருடன் புறப்பட்ட 6E 2142 இண்டிகோ விமானம் நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கி சேதமடைந்தது. திடீரென எதிர்ப்பட்ட ஆலங்கட்டி புயலால் நடுவானில் விமானம் குலுங்கியதால் அவசரக் கால அனுமதிக்கு பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அணுகியபோது, லாகூர் வான் போக்குவரத்து மையம் அனுமதி மறுக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது. இதன் விளைவாக விமானிகள் கடும் போராட்டத்துக்கு பிறகு, 220 பயணிகளுக்கு பாதிப்பின்றி […]
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு இந்தியா தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும் தகவல்கள் பரவியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்படி கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை […]
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.இந்த ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பொதுமக்களிடம் பேசிய அவர் ” பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேசுவோம். என்னுடைய எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும் ஆனால், தற்போது என் ரத்தம் கொதிக்கிறது. என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது” […]
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்களின் கைது எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. தற்பொழுது, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் வாரணாசியைச் சேர்ந்த ஒருவரை உத்தரப் பிரதேச காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது. இந்தியாவின் […]
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், தி.மலை, போளூர், விருத்தாசலம், மன்னார்குடி, குழித்துறை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்பட்டன. இதனை பிரதமர் மோடிராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பொதுமக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை […]