இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் – 1,800 பறவைகள் பலி!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் பறவைக் காய்ச்சல் பல மாவட்டங்களுக்கு பரவிவரும் நிலையில், அதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களின் இறந்த வாத்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த நோய் மக்களுக்கு பரவவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் […]

BirdFlu 3 Min Read
Default Image

#BreakingNews : நாடு முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்- மத்திய அரசு

நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி உள்ளன. ஆகவே ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் நாடு முழுவதும் […]

coronavaccine 3 Min Read
Default Image

#BREAKING: தடங்கல் ஏதுமின்றி கொரோனா தடுப்பூசி – சீரம், பாரத் பயோடெக் கூட்டறிக்கை

கொரோனா தடுப்பூசியை தடங்கல் ஏதுமின்றி விநியோகிக்க உறுதி ஏற்றுள்ளதாக சீரம், பாரத் பயோடெக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை தடங்கல் ஏதுமின்றி விநியோகிக்க உறுதி ஏற்றுள்ளோம் என சீரம், பாரத் பயோடெக் நிறுவனம் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. மக்களின் உயிர் காப்பது ஒன்றே தங்கள் முழுமுதல் நோக்கம் என்று சீரம், பாரத் பயோடெக் நிறுவனம் உறுதி ஏற்றுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தின் தரம் தொடர்பாக சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் இடையே முரண்பட்ட கருத்துக்கள் வெளியான நிலையில், தற்போது இரு நிறுவனமும் […]

BharatBiotech 3 Min Read
Default Image

வேகமாக பரவும் பறவைக்காய்ச்சல் ! மாநில பேரிடராக அறிவித்த கேரளா

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பல மாவட்டங்களுக்கு பரவிவரும் நிலையில், அதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது .மேலும் நோய் கண்டறியப்பட்ட கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய இரு மாவட்டங்களின் சில பகுதிகளில் இறந்த வாத்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோது மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த நோய் மக்களுக்கு பரவவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் நோயால் இறந்த பின்னர் […]

BirdFluinKerala 4 Min Read
Default Image

நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை, வாழ்க தமிழ் – கெஜ்ரிவால்

முதல்வர் பழனிசாமியின் நன்றி தெரிவித்ததை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்தற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த […]

#ArvindKejriwal 3 Min Read
Default Image

பிரதமர் மோடிக்கு முதல் தடுப்பூசி- அஜித் சர்மா..!

பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸின் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ பயன்படுத்தஅவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பீகார் பாகல்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவும், பாலிவுட் நடிகை நேஹா ஷர்மாவின் தந்தையுமான அஜித் சர்மா கூறுகையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுவான மக்களிடையே பல்வேறு வகையான சந்தேகங்கள் இருப்பதாக கூறினார். இதைக் கருத்தில் கொண்டு, முதலில் பிரதமர் […]

#Modi 3 Min Read
Default Image

கொச்சி- மங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் தொடக்கம்!

கொச்சி- மங்களூரு இடையே 450 கி.மீ தூரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை காணொளி மூலம் பிரதமர் தொடங்கிவைத்தார். கொச்சி-மங்களூரு இடையே குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் மோடி டெல்லியிலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 450 கி.மீ தூரமுள்ள இந்த குழாயை கெயில் (இந்தியா) லிமிடெட் உருவாக்கியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை இத்திட்டம் இணைக்கிறது. கொச்சியில் உள்ள திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) மறுசீரமைப்பு முனையத்திலிருந்து, மங்களூரு வரை குழாய் வழியே […]

#PMModi 3 Min Read
Default Image

கோவிஷீல்ட் , கோவாக்சின் – அரசின் ஒப்புதல் பெற்ற பின் விரைவில் பொது மக்களுக்கு தடுப்பூசி!

கோவிஷீல்ட் , கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் அரசாங்கம் ஒப்புதல் கையெழுத்து அளித்து விட்டால் அடுத்த வாரமே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருட காலமாக மக்கள் பல கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் நாளுக்கு நாள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல நாடுகளிலுள்ள ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சில வெற்றியடைந்துள்ளது.  இந்தியாவில் […]

coronavirus 5 Min Read
Default Image

#BreakingNews: புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு – ஒரே நாளில் 20 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்வு உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.எனவே இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு புதிய உருமாறிய தொற்று உறுதியானால் மத்திய அரசே முதலில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தினமும் மத்திய அரசு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது.அந்த வகையில் இன்று […]

coronavirus 3 Min Read
Default Image

பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தினம்தோறும் ரூ.100 வழங்க முடிவு..!

அஸ்ஸாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு வகையான முன்முயற்சியாக, பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் வகுப்புகளில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு ரூ .100 வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் மாணவர்களுக்கு பிரக்யன் பாரதி யோஜனாவின் கீழ் இருசக்கர வாகனங்களை மாநில அரசு வழக்கும் என சர்மா கூறினார். இதற்காக மாநில அரசு ரூ.144.30 கோடியை செலவிடும் என தெரிவித்தார். இந்த எண்ணிக்கை […]

#School 3 Min Read
Default Image

#BREAKING : புதிய நாடாளுமன்ற கட்ட அனுமதி வழங்கப்பட்டது..!

புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் இரண்டு நீதிபதிகள் கட்டடப் பணிக்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினர். புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி அனுமதி வழங்கியது […]

Newparliament 4 Min Read
Default Image

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கலாம்.!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் (ஆன்லைன்) வாக்களிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்ய மத்திய சட்டத்துறை, வெளியுறவுத்துறைக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் […]

Abroad 3 Min Read
Default Image

மொபைல் செயலி மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்து 7 லட்சத்தை இழந்த 68 வயது முதியவர்!

பெங்களூருவில் மொபைல் செயலி மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்து 7 லட்சத்தை இழந்த 68 வயது முதியவர். தற்போதைய நவீன காலகட்டத்தில் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே உணவுகள் வாங்கி சாப்பிடுவது, பொருட்கள் வாங்குவது, டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் ஆடைகள் வாங்குவது என வேலைகள் அனைத்தும் சுலபமாகிவிட்டது. இந்நிலையில், பலரும் தற்பொழுது விமான டிக்கெட் முன்பதிவுகளை மொபைல் செயலிகள் மூலமாகவே செய்து விடுகிறார்கள், இதனால் சிலர் ஏமாற்றமும் அடைகிறார்கள். அதில் ஒன்றாக தற்பொழுது பெங்களூருவை சேர்ந்த 68 வயதுடைய […]

Air ticket 3 Min Read
Default Image

கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்! கேரள வாகனங்கள் தமிழகத்திற்குள் வர தடை!

பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன.  இதனால் இறந்த வாத்துகளிலிருந்து 8 மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, இதில் ‘எச் 5 என் 8’ வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. அங்கு பறவை காய்ச்சல் வேகமாக […]

Bird flu 4 Min Read
Default Image

எதிர்கால திட்டம்: குழாய்வழி கேஸ் விநியோகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!

ஒரே நாடு, ஒரே கேஸ் விநியோக அமைப்பு நோக்கத்தில் ரூ.3,000 கோடி செலவில் குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். கொச்சி-மங்களூரு இடையே குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 450 கி.மீ தூரமுள்ள இந்த குழாயை கெயில் (இந்தியா) லிமிடெட் உருவாக்கியுள்ளது. இது ஒரு நாளைக்கு 12 மில்லியன் மெட்ரிக் தரமான கன மீட்டர் போக்குவரத்து திறன் கொண்டது. கொச்சியில் உள்ள திரவ இயற்கை எரிவாயு […]

#PMModi 4 Min Read
Default Image

முதலில் நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன் – மத்திய பிரதேச முதல்வர்

முதலில் தான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் முன்னுரிமை குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கூறுகையில், முதலில் தான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் முன்னுரிமை குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட […]

coronavaccine 3 Min Read
Default Image

உருமாறிய கொரோனாவால் நிறுத்தப்பட்ட சேவை ! நாளை மீண்டும் தொடங்குகிறது

உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில்,நாளை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.  சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது பின்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி அதாவது நாளை முதல் விமான சேவை தொடங்கப்படும் என […]

ccoronavirus 3 Min Read
Default Image

பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை போன்ற போலி ஆவணங்களை தயாரித்த 10 பேர் கைது!

பான் கார்டு, ஆதார் அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்ததற்காக, பெங்களூரு நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் 10 பேரை கைது செய்துள்ளனர். பெங்களூரில் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஏஜென்சிகளின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்ததற்காக, பெங்களூரு நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் 10 பேரை கைது செய்துள்ளனர்.பான் கார்டு, ஆதார் அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பெங்களூர் இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாடீல் அவர் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள் […]

#Arrest 2 Min Read
Default Image

குழாய்வழி எரிவாயு திட்டம் – இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி 

கொச்சி – மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயு திட்டத்தை,  காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி .இந்நிகழ்வு, ‘ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு’ உருவாக்குவதில், முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். குழாய்வழி எரிவாயு திட்டம் பற்றி: இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , 450 கி.மீ நீளமுள்ள இந்த குழாய்வழி எரிவாயு திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் […]

#PMModi 5 Min Read
Default Image

#BREAKING: மீண்டும் தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை.!

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதன்படி, மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் […]

#CentralGovernment 3 Min Read
Default Image