காஷ்மீர் : ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7, 2025 அன்று அதிகாலை 1:05 மணிக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் […]
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேகொள்கிறார். பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் எல்லைகளைக் கொண்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடனான அவரச ஆலோசனை கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெறும். […]
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 70 முதல் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது. அதிலும், பஹாவல்பூரில் நடந்த […]
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய விண்வெளித்துறையின் வளர்ச்சி பற்றிய பல்வேறு தகவல்களை கூறினார். இந்திய விண்வெளி துரையின் சாதனைகள் குறித்தும் விவரித்தார். அந்த வீடீயோவில் பேசியிருந்த பிரதமர் மோடி, விண்வெளி என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல. அது ஒரு ஆர்வம், தைரியம் மற்றும் கூட்டு முன்னேற்றத்தின் பலன். இந்திய விண்வெளிப் பயணம் இந்த உணர்வைப் பிரதிபலிக்கிறது. 1963-ல் ஒரு சிறிய ராக்கெட்டை […]
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை செயலர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மட்டுமல்லாமல் இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவும் பல்வேறு பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது . இதுகுறித்து இன்று ராணுவ உயர் அதிகாரி சோபியா […]
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்கினர். மொத்தம் 9 இடங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என தகவல் வெளியாகியது. இந்த தாக்குதல் குறித்து இன்று காலை விளக்கம் அளிக்க உள்ளதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் செய்தியாளர் […]
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடத்திய தாக்குதலில் இதுவரை 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இப்படியான சூழலில் ஏற்கனவே இன்று திட்டமிடப்பட்டு இருந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகள் நாடுமுழுவதும் பல்வேறு […]
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்க கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திய ராணுவம் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 4 இடங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தன. மீதம் உள்ள 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 9 இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது பயங்கரவாதிகள் இருப்பிடங்களை குறிவைத்து மட்டுமே நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தான் மக்கள் மீதோ, ராணுவம் மீதோ இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும் ஒரு நேபாள நாட்டினர் என 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது. இந்த பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இயக்கம் என கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அதற்கு தாக்க பதிலடி கொடுக்க வேண்டும் […]
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 3,000 மாற்றுக்கட்சியினர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வில் பேசிய முதல்வர், ”வெற்றிகரமாக 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். ஏற்கனவே நிறைவேற்றியுள்ள திட்டங்கள் எல்லாம் மக்களிடையே நன்றாக சென்று சேர்ந்திருக்கிறது. இன்னும் ஓராண்டில் என்ன திட்டங்களை நிறைவேற்றப்போகிறோம் என்பதை கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். […]
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி வரை ராணுவ வான்வழிப் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. பயிற்சியின் போது அப்பகுதியில் விமானப் பயணத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் விமானிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, குறிப்பாக கட்டுப்பாட்ட கோடு (எல்ஓசி) மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சுற்றியுள்ள பகுதிகள் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இந்தப் பகுதிகளைச் […]
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது ஆனால், இந்த IED குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. கச்சி மாவட்டத்தின் மாக் பகுதியில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் படையினரின் வாகனத்தை ஐஇடி மூலம் குறிவைத்து தாக்கியதாக இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) வெளியிட்டுள்ள […]
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் பயணித்த ராணுவ வாகனம் கர்னாவின் டீத்வால் பகுதியில் உள்ள ரெயாலா முர்ச்சனா சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பொழுது, இரண்டு வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், இருவர் காயமடைந்து […]
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் படி, 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் விதி 110 இன் கீழ், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவற்றில் ஒன்று, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், […]
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை முறையாகப் பின்பற்றுமாறு உணவு பாதுகாப்புத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. ஒரு லி. குடிநீரில் கால்சியம் 10 முதல் 75 மி.கி:மெக்னீசியம் 5 முதல் 30 மி.கி இருத்தல் அவசியம். குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த […]
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 2025-ல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த திட்டம் பற்றி அறிவித்தார். சாலைகளில் விபத்தில் சிக்குவோருக்கு ரூ.1.50 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சையை இலவசமாக அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்து இருந்தார். விபத்து நேர்ந்த 7 நாட்கள் இத்திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம் என […]
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பெண் சரண்யா எனவும், அவர் மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பெண்கள் பிரிவு நிர்வாகி எனவும் தகவல் வெளியானது. இதனை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என […]
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வருகிறோம். இந்தியாவின் கொள்கை ரீதியாக நமக்கு எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களில் கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களை பின்பற்றும் வகையில் முதன்மையான அரசாக தமிழ்நாட்டை […]
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையேயான சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளதால் இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பு படைகளை பலப்படுத்தி வருகின்றன. அதேபோல, பாகிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து பாயும் சிந்து நதியை தடுத்த நிறுத்த இந்திய […]