2019 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு.
நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக வழங்கப்படும் இந்த விருதை நடிகர் அமிதாப்பச்சனும், தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜிகணேசன், இயக்குநர் கே.பாலசந்தருக்கு பிறகு இவ்விருதினை ரஜினி பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node