5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்! 

இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

DMK Leader MK Stalin

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு எவ்வாறு தயாராகுவது  உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

தீர்மானங்கள் :

இதில், ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கும், மறைந்த போப் பிரான்சிஸுக்கும் இரங்கல் தீர்மானமானது திமுக மாவட்ட செயலாளார் கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

அதனை அடுத்து, திமுக அரசு 5வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்று இந்தியாவிற்கே ரோல் மாடலாக செயல்படுவதாக குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

திமுக அரசின் சாதனைகளை பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள் – 224 பகுதிகள் – 152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!” எனும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்திட தீர்மானம் நிறைவேற்றம் செயயபட்டது.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது என்ற தீர்மானம், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை கொண்டு மத்திய அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது என மத்திய பாஜக அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் என மேற்கண்ட இரங்கல் தீர்மானத்தோடு சேர்த்து 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

மு.க.ஸ்டாலின் அறிவுரை :

மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். அவரை சட்டமன்றத்துக்கு தகுதி உள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது மாவட்ட செயலாளர்களின் கடமை என்றும், கடந்த 7 ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். வெற்றிக்குக் காரணம் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் என்றும்,  இனி அமைச்சர்கள், சென்னையில் இருப்பதை  விட அவரவர் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிட வேண்டும் என்றும்,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்றும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்