ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வா? அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்.!

Electricity bill high

சென்னை : தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுமறுப்பு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு (TN Fact Check) விளக்கம் கொடுத்துள்ளது.

அதாவது, ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக ஒரு பொய்யான தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அது, 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது வெளியான செய்தித்தாள் நகல், தற்போது தவறாகப் பரப்பப்படுகிறது எனவும் இந்தாண்டு மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை எனவும், அரசு விளக்கமளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ramadoss
Subhanshu Shukla arr
Space X - ISRO
tn heavy rain
Iran hoards 400 kg of uranium
Axiom4 Launch