ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வா? அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்.!

சென்னை : தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுமறுப்பு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு (TN Fact Check) விளக்கம் கொடுத்துள்ளது.
அதாவது, ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக ஒரு பொய்யான தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அது, 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது வெளியான செய்தித்தாள் நகல், தற்போது தவறாகப் பரப்பப்படுகிறது எனவும் இந்தாண்டு மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை எனவும், அரசு விளக்கமளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?
June 25, 2025
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025