திருவள்ளூர் : தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், ஒரு பெண் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ எறிந்து […]
கன்னியகுமாரி: தேர்தல் பிரச்சாரம் முடிந்ததை அடுத்து, 3 நாட்கள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தனது தியானத்தை தொடங்கினார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட , நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவுபெற்றுவிட்டன. இதனை அடுத்து, இன்று முதல் ஜூன் 1 வரையில் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். உ.பி வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வந்திறங்கிய மோடி, […]
டிடிஎஃப் வாசன் : காரை வேகமாக ஒட்டிய வழக்கில் கைதாகி இருந்த யூட்யூபரான டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் […]
டிடிஎஃப் வாசன் : உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கார் ஓட்டியதால் கைதான டிடிஎஃப் வாசனை தற்போது மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர் மீது […]
சாலை விதிகள்: சாலை விதிமீறல்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைக்கவும் பல்வேறு புதிய திருத்தங்களை மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கவும், வாகன பயன்பட்டால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை குறைக்கவும் அவ்வப்போது மத்திய போக்குவரத்து அமைச்சகம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தும். அதனை மாநில அரசுகள் அனுமதி பெற்று அந்தந்த மாநிலங்களில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமல்படுத்தப்படும். அப்படியாக, மத்திய போக்குவரத்து அமைச்சகம் வரும் […]
வைகோ: மதிமுக நிறுவனர் வைகோ அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என அவரது மகன் துரை வைகோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மே 25ஆம் தேதி (சனிக்கிழமை) மதிமுக நிறுவனர் வைகோ நெல்லையில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னை அப்பாலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]
ரஜினிகாந்த் : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் வேட்டையன் படப்பிடிப்பு முடிந்தவுடன் 10 நாள் ஓய்விற்காக அபுதாபி சென்றிருந்தார். பின்னர், ஓய்வை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் சென்னை திரும்பிய அவர் கூலி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் இமயமலை செல்ல உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு செல்வதற்காக போயஸ் கார்டனில் இருந்து […]
வைகோ : அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கடந்த மே 25-ம் தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்த போது அன்றிரவு கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு வலது தோள்ப்பட்டையில் சிறிதளவு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை உடனடியாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு […]
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருந்த சமயத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை புறப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பேரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 6 பைகளில் 4 கோடி ரூபாயை […]
நடிகர் விஜய் : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. உலக பட்டினி தினமாகக் கருதப்படும் (மே 28ம் தேதி) இன்று நடிகரும் அரசியல் வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்படி, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் அருகே, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, பொதுமக்களுக்கு உணவு வழங்கும் […]
மதுரை: ஜெயலலிதாவை பற்றி கூறி பாஜகவினர் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள். முடிந்தால் அவர்கள் தலைவர்களின் பெருமைகளை கூறி மக்களிடம் ஆதரவு பெறுங்கள் – ஆர்.பி.உதயகுமார். சில தினங்கள் முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் பற்றி தனியார் செய்தி சேனல் நேர்காணலில் , ஜெயலலிதா ஓர் இந்துத்துவா தலைவர் என்றும், அவர் தான் இந்து என்பதை வெளிப்படியாக மக்களிடத்தில் வெளிப்படுத்தினார் என்றும் கூறிய கருத்துக்கள் அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டு […]
சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் 11 வயது சிறுமிக்கு 6மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 2 சிறுவர்கள் , ஒரு தையல் கடைக்காரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமிக்கு உறவுக்கார சிறுவன், அவனது நண்பன் உட்பட மேலும் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுபோதைக்கு அடிமையான சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை சரிவர கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனை […]
கன்னியாகுமரி: இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்து மே 30, 31, ஜூன் 1ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வரவுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைய உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் (மே 29) நிறைவடைய உள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி தேர்தல் பிரச்சரமும் இதில் அடங்கும். இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக […]
நெல்லை: கடந்த வாரம் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடைகாலத்தில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் நிலை உருவானது. இதனால், விவசாய நிலங்களுக்கு பயிர் இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், சபாநாயர் அப்பாவு, பயிர் காப்பீட்டு நிவாரணம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு விவசாய பகுதிகளில் நெற்பயிர்கள் […]
குரூப் 4: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் 10ஆம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் இந்த ஆண்டு 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான ஹால் டிக்கெட் (நுழைவு சீட்டு) தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் tnpsc.gov.in மற்றும் tnpscexams.inஆகிய இணையதளத்திற்கு சென்று பயனர்கள் தங்கள் நிரந்தர […]
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகவாதி தான் என்றும், ஆனால் அவர் மதவெறி பிடித்தவர் இல்லை என்றும் திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறினார். சில தினங்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றில் பேசுகையில், ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றும், அவர் தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே பல்வேறு இடங்களில் காட்டினார் என்றும், தனது சம்பளத்தை கூட இந்து கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்தார் […]
சென்னை: மதிமுக தலைவர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்று நாகர்கோவிலில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கு மதிமுக தலைவர் வைகோ கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் திருநெல்வேலி வந்து இருந்தார். சகோதரர் வீட்டில் தங்கி இருந்த வைகோ இரவில் வீட்டிற்குள் தவறி விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்து இருந்தார். மேலும், உடனடியாக நெல்லையில் இருந்து தூத்துக்குடி […]
சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தொடர்பு கொண்ட 2 உயர் அதிகாரமிக்க நபர்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி, சேலம், சென்னை என பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால் சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் […]
சென்னை : சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் இரவு மற்றும் அதிகாலை என 2 மின்னஞ்சல் மூலமாக வந்த மிரட்டலில், 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாம். இந்நிலையில், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து, அலர்ட்டான போலீசார் இன்று அதிகாலை விமான நிலையத்தில், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு […]
சென்னை: கடந்த சில தினங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி வழியாக தூத்துக்குடி செல்லும் பேருந்தில், நாங்குநேரி நீதிமன்ற பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்த ஸ்டாப்பில் காவலர் ஒருவர் சீருடையுடன் ஏறினார். அவரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்ட பொழுது எடுக்க மறுத்து தான் அரசு ஊழியர் அரசு பணிக்காக செல்கிறேன் என கூறியுள்ளார். காவலர் வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணிக்க […]