அதிரடியாக கலைக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம் ...!புதிய குழுவை ரஜினி !?

ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை

ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர்,அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும்? நான் ஏதாவது பேசினால் உடனே விவாதமாகிவிடுகிறது. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஊடக நிருபர் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு தலை சுற்றிவிட்டது. நைஸ் நைஸ் என்றேன்.

unknown node

வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை. அரசியலுக்கு பணத்துக்காக, புகழுக்காக வரப் போவதில்லை. பதவிக்காக என்றால் 1996லேயே வந்திருப்பேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை வரவில்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்படி வந்தால் நான் ஆன்மிகவாதி என்று சொல்வதற்கே தகுதியற்றவன் ஆகிவிடுவேன்.என் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு.தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தன்னால் அமைக்க முடியும் என்றும் பேசினார்.

unknown node

ஆனால் நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.ஆனால் கமலுக்கு முன்பு நடிகர் ரஜினிதான் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்தார்.ஆனால் ரஜினியை பின்னுக்குத்தள்ளி கட்சியும் ஆரம்பித்தார்.ஆனால் தற்போது வரை ரஜினி வெறும் பேச்சாக மட்டுமே கூறிவருகிறார்.இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இளவரசன் தலைமையிலான குழுவை கலைத்து விட்டு புதிய குழுவை ரஜினி உருவாக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.