கலக்கத்தில் சசிகலா ? சிறை நிர்வாகம் மறுப்பு?விடாது துரத்தும் சோதனை ....

சிறை நிர்வாகம் சொத்து குவிப்பு வழக்கில்,பெங்களூரு அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிற்கு பரோல் வழங்க  மறுத்து உள்ளது.

சிறை நிர்வாகம் சொத்து குவிப்பு வழக்கில்,பெங்களூரு அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிற்கு பரோல் வழங்க  மறுத்து உள்ளது.

கடந்த 16ம் தேதி இரவு சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று கூறியது

இதனை தொடர்ந்து பரோல் கேட்டு சசிகலாமனு கொடுத்திருந்தார். இந்நிலையில் நடராஜன் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உள்ளது என மருத்துவர்கள் கூறியதால்,சசிகலாவிற்கு பரோல் மறுக்கப்பட்டது

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாராசிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது

இந்நிலையில்,சில மாங்களுக்கு முன்பு தான் சசிகலாவிற்கு பரோல் வழங்கப்பட்டதால்,நெருங்கிய உறவுகள் உயிரிழப்பு நேரிட்டால் மட்டுமே பரோல் வழங்க முடியும் என சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.