வருங்காலத்தில் அதிமுகவை யாராவது ஒரு பெண் வழிநடத்தும் காலகட்டம் வரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
unknown nodeபின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
unknown nodeபன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.
unknown nodeஇந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.மதுரையில் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி பற்றி பெண்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு,விரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும்.ஆண்களுக்கு நிகராக அதிமுகவை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான் .வருங்காலத்தில் அதிமுகவை யாராவது ஒரு பெண் வழிநடத்தும் காலகட்டம் வரும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.ஏற்கனவே அதிமுகவிற்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா தலைமை இருந்த நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.