லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸி., அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு? காரணம் என்ன ?
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு எனக் கூறப்படுகிறது.

லண்டன் : 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி ஜூன் 11 ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய அணி ஜூன் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர்களுக்கு அன்று மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
என்ன காரணம்? என்று பார்த்தால், ஷுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி, இந்தியா vs இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக அந்த இடத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட், 20ம் தேதி லார்ட்ஸில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Vibes. Form. Focus 🔥#TeamIndia in full prep mode at Beckenham 💙 #ENGvIND pic.twitter.com/kBkDiGetmp
— BCCI (@BCCI) June 9, 2025
ஆனால், அவர்களின் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற உள்ளது, லார்ட்ஸில் அல்ல. இருப்பினும், இந்திய அணிக்கு லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இறுதியில், ஆஸ்திரேலிய அணிக்கு மைதானம் “கிடைக்கவில்லை” என்று கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி செய்ய மாற்று இடத்தைத் தேட வேண்டியிருந்தது.
Australia ramp up training at Lord’s as the #WTC25 Final draws near 💪
All you need to know ➡️ https://t.co/SSsSiOKUj2 pic.twitter.com/Bwp56zHC6D
— ICC (@ICC) June 8, 2025
பின்னர், அவர்கள் தெற்கு லண்டனில் உள்ள பெக்கன்ஹாம் என்ற இடத்திற்கு மூன்று மணி நேர பயணம் செய்து பயிற்சி செய்தனர். இந்த சம்பவம் சிறிய சர்ச்சையை ஏற்படுத்தியது, ஏனெனில் WTC இறுதிப் போட்டிக்கு தயாராகும் ஆஸ்திரேலிய அணிக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று பலர் விமர்சித்தன.
இருப்பினும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பட்டபோது, அவர் “இது ஒரு பெரிய பிரச்சினையல்ல, ஆனால் எதிர்காலத்தில் சிறந்த முறையில் கையாளப்பட வேண்டும்” என்று கூறினார்.