வெல்லப்போவது யார்.? ராஜஸ்தான் – மும்பை இன்று பலப்பரீட்சை.!

புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திலுள்ள மும்பை, 8-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்றிரவு பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Rajasthan Royals vs Mumbai Indians

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன. மும்பை அணி இந்த போட்டியில் வலுவான ஃபார்மில் களமிறங்கும், தற்போது பத்து ஆட்டங்களில் ஆறு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மும்பை அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். 6 வெற்றிகளை பெற்றுள்ள மும்பை பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் அணி முன்னேற முடியும். இரு அணிகளிலும் பேட்டிங் பலமாக இருப்பதால் போட்டியில் ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது.

சமீபத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பத்து போட்டிகளில் மூன்று வெற்றிகளையும் ஏழு தோல்விகளை சந்தித்து அட்டவணையின் கீழே இருந்து மேலே வர போராடி வருகின்றனர்.

இருப்பினும், சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வெற்றி அவர்களது உற்சாகத்தை அதிகரிக்கும். அந்த வெற்றியில் 14 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உலக கிரிக்கெட் ராசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை விளையாடியுள்ள 30 போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 15 போட்டிகளில் வெற்றி பெற்று சற்று முன்னிலை வகிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்