பெங்களூரு உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.!
ஆர்சிபி வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூர் : பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என பாஜக விமர்சித்து வருகிறது. இதையடுத்து, சட்டப்பேரவையிலிருந்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, நேரடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
முன்னதாக, இந்த துயரச் சம்பவத்துக்காக, உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், விபத்து குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது, சம்பவத்திற்கு கர்நாடக அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.
பெங்களூரு நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர், 33 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தோருக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும். பெங்களூரு விபத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை, எங்கள் அரசு இதில் அரசியல் செய்யாது. ஆனால் இதை வைத்து மாநில பாஜக அரசியல் செய்கிறது. 15 நாட்களுக்குள் நீதித்துறை விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வளவு பெரிய கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. விதான் சௌதா முன்பு 1 லட்சம் பேரும், சின்னசாமி மைதானத்தின் முன்பு 3 லட்சம் பேரும் கூடி இருந்தனர். மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே இருக்க முடியும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். கிரிக்கெட் மைதானத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் உள்ளே சென்றனர்.
சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம் பேர் மட்டுமே அமரும் வசதி உள்ளது, ஆனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். விதான் சவுதா முன்பு நடந்த கொண்டாட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை, சின்னசாமி மைதான கூட்ட நெரிசலில் அசம்பாவிதம் நடந்து விட்டது” என்று அவர் கூறியுள்ளார்.