”பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்கிறது” – அன்புமணி குற்றசாட்டு.!

நம்ம கட்சியை பலவீனப்படுத்த சூழ்ச்சி நடக்குது, நடக்குற குழப்பத்துக்கு நானோ ஐயாவோ காரணம் இல்ல என அன்புமணி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Anbumani Ramadoss

காஞ்சிபுரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ” என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை மறைக்க பாமகவிற்குள் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க சூழ்ச்சி.

இந்த பிரச்சனைக்கு நானோ ஐயாவோ காரணம் கிடையாது. ஒரு சிலர் நம் கட்சியிலேயே அந்த சூழ்ச்சிக்கு துணை போகிறார்கள். யார் யார் என்பது விரைவில் தெரியவரும். பா.ம.க-வில் குழப்பத்தை ஏற்படுத்தும் தி.மு.க-வின் முயற்சி எடுபடாது.

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது அதை உடைத்து எறிவோம். பா.ம.க நடத்திய கூட்டத்தால் தி.மு.க-வுக்கு வயிற்றெரிச்சல். மாநாட்டின் கூட்டத்தை பார்த்து ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது” என்று பரபரப்பாக பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்