"ட்ரம்ப் இந்தியா உடனான உறவை துண்டிக்க இதுதான் காரணம்" – முன்னாள் ஆலோசகர் குற்றச்சாட்டு.!

தனது குடும்பத்தின் கிரிப்டோ வணிகத்திற்காக இந்தியா போன்ற ஒரு மூலோபாய கூட்டாளியை டிரம்ப் ஓரங்கட்டியதாக ஜேக் சல்லிவன் குற்றம் சாட்டினார்.

Jake Sullivan -Pakistan

அமெரிக்கா :இந்தியாவுடனான உறவில் ஏற்பட்டுள்ள கசப்பு குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், டொனால்ட் ட்ரம்ப் தனது குடும்பத்தின் வணிக நலன்களுக்காக பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவை வளர்த்து, இந்தியாவுடனான உறவுகளை புறக்கணித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய மூலோபாய பின்னடைவு. புது டெல்லியை வாஷிங்டனுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான பல வருட கடின உழைப்பை இது வீணடித்துள்ளது என்றும், இந்தியா மீண்டும் சீனாவின் பெய்ஜிங்கிற்கு நெருக்கமாகச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

ட்ரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்தது, இது எந்தவொரு நாட்டின் மீதும் விதிக்கப்பட்ட மிக உயர்ந்த வரியாகும், அதேநேரம் பாகிஸ்தானுக்கு 19% என்ற குறைந்த வரி விதிக்கப்பட்டது. இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் வாங்குதல் மற்றும் வர்த்தக பற்றாக்குறையை ட்ரம்ப் காரணமாகக் கூறினாலும், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் கூறியதை இந்தியா நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் இந்தியா-அமெரிக்க உறவுகளை பாதித்து, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளிடையே அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. பைடன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன், பாகிஸ்தானில் வணிக ஒப்பந்தங்களைச் செய்ய குடும்ப உறுப்பினர்கள் விரும்பியதால் டிரம்ப் இந்தியாவுடனான உறவுகளை ஓரங்கட்டிவிட்டதாகக் கூறினார்.

"ட்ரம்ப் இந்தியா உடனான உறவை துண்டிக்க இதுதான் காரணம்" – முன்னாள் ஆலோசகர் குற்றச்சாட்டு.!