சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின்!

தமிழ் நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Ashwin announces retirement

சென்னை :இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் காவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டியில் விளையாடியபோதே விராட் கோலிக்கு “ஹக்” கொடுத்து தான் ஓய்வு பெறுவதற்கான சிக்னலை கொடுத்து இருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஓய்வு பெற்ற தகவலை பிசிசிஐ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அஷ்வின் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு அவருக்கு நன்றி தெரிவித்ததோடு “இந்தியாவின் விலைமதிப்பற்ற ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அவருக்கு மிகவும் நன்றி” என குறிப்பிட்டுள்ளது.

unknown node