ஓரணியில் தமிழ்நாடு: ஓடிபிக்கான திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Oraniyil TamilNadu - Supreme Court

சென்னை :‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரத்தின் கீழ் திமுகவினர் பொதுமக்களிடமிருந்து OTP (ஒருமுறை கடவுச்சொல்) எண்களைப் பெறுவதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்திருந்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

ஆனால், உச்சநீதிமன்றம் திமுகவின் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, OTP பெறுவதற்கு மட்டுமே தடை விதித்தது, உறுப்பினர் சேர்க்கைக்கு தடை இல்லை என்று தெளிவுபடுத்தியது.

இருப்பினும், திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம், ஆதார் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதாகக் கூறி, அதிமுக உறுப்பினர் ராஜ்குமார் தொடர்ந்த வழக்கில் இந்தத் தடை விதிக்கப்பட்டது.